• Apr 27 2024

வனிதாவின் ஒற்றை போட்டோவால நான் பட்ட பாடு இருக்கே - செத்திடனும் போல இருந்திச்சு- பவர் ஸ்டாரின் வைரலாகும் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

கண்ணா லட்டுத் திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகர் பவர் ஸ்டார். இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் நடிகை ஷகிலா நடித்தி வரும் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய பவர் ஸ்டார்நான் சினிமாவிற்கு வரும் போது 60 கோடி ரூபாய் கிட்ட செலவழித்து இருக்கின்றேன். அதுக்கு பிறகு தான் ஸ்டாராக மாறியுள்ளேன். நான் சினிமாவிற்கு வந்ததுக்கப்பிறம் இவன் எல்லாம் ஒரு நடிகனா என்று எல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நிறைய பணம் இழந்திட்டேன். ஒரு கால கட்டத்தில் எனக்கிருந்த பிரச்சினைக்கு சாகலாம் என்று கூட தோனிச்சு இருப்பினும் இதெல்லாம் தாண்டி தான் இப்போ முன்னுக்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.


மேலும் வனிதாவுடன் பிக்கப் படத்தில் நடித்து வருகின்றேன். படத்துக்காக ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருந்தோம். அதை தான் அவங்க டுவிட்டர்ல போட்டிருந்தாங்க. அதனால என்னோட வீட்டுக்கு நிறைய மீடியா வந்து கேட்டாங்க வனிதாவை கல்யாணம் பண்ணிட்டீங்களா என்று கேட்டாங்க சமாளிக்கவே கஷ்டப்பட்டுட்டேன்.

அதுக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது வனிதாவே ஓபனா சொல்லிட்டாங்க அது படத்துக்காக தான் எடுக்கப்பட்டது. என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில தலையிட கூடாது என்று நல்லா பேசியிருந்தாங்க.ஆனால் வனிதாவும் ரொம்ப நல்லவங்க. தனக்கு தோணுவதை ஓபனா சொல்லிடுவாங்க என்று கூறியிருந்தார்.


மேலும் நான் இதுவரை 101 படங்களுக்கு மேல நடிச்சிருக்கின்றேன்.அத்தோடு வனிதா பிரச்சினையை வீட்ல யாரும் நம்பல அதுக்க பிறகு எல்லாம் சினிமாவுக்காகத் தானே என ப்ரீயாக விட்டுட்டாங்க என்றும் தான் தற்பொழுது கதாநாயகனாகவும் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement