தென்னிந்திய சினிமாவில் அதிகளவு பேசப்படும் படமாக மாறி இருப்பது தான் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றது. இப்படம் அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு,உருவாக்கப்பட்டது.
சோழர்களின் ஆட்சியை மையப்படுத்தி இத்தரைப்படம் எடுக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே மணிரத்னம் அறிவித்திருந்தார்.
இவர்களில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியான குந்தவையை த்ரிஷா வடிவில் பலரும் அறிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இன்னொரு குந்தவை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருறது. உண்மையில் இவர் குந்தவை அல்ல அது குந்தவி. இந்த குந்தவி புகைப்படத்தில், கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவல் படமாக்கப்பட்டபோது அதில் குந்தவியாக நடித்த வைஜெயந்தி மாலா தான்.
பார்த்திபன் கனவு படத்தில் பார்த்திபன் என்ற சோழ அரசனாக அசோகனும், சோழ இளவரசன் விக்கிரமனாக ஜெமினி கணேசனும், பல்லவ மன்னன் மாமல்லனாக எஸ்.வி.ரங்காராவும், பல்லவ மன்னன் மகள் குந்தவையாக "வைஜயந்தி மாலாவும் நடித்திருப்பார்கள். கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலில், நரசிம்ம பல்லவ மன்னன் மகளாக வரும் குந்தவி, விக்கிரம சோழனை காதலிப்பார்.
ஆனால் இதற்கப்புறம் முன்னூறு ஆண்டுகள் கழித்து, பொன்னியின் செல்வனில், அருள்மொழி வர்மனின் தங்கையாக, அதாவது குந்தவையாக பிறந்து வந்தியத்தேவனை மணந்திருப்பார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!