• Apr 28 2024

அவரை பார்த்து எல்லாருமே பழகிக்கனும் - மறைந்த இயக்குநர் சித்திக் குறித்து ஓபனாகப் பேசிய வடிவேலு

stella / 8 months ago

Advertisement

Listen News!


பிரபல மலையாள இயக்குநரான சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டாார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சித்திக்கின் பெயரை சொன்னதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் படம் ப்ரெண்ட்ஸ் தான்.விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்த சூப்பர் ஹிட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.ப்ரெண்ட்ஸ் படம் என்றாலே கான்டிராக்டர் நேசமணி தான். அப்ரசன்டிகளை வைத்துக் கொண்டு நேசமணி பட்ட பாட்டை யாராலும் மறக்க முடியாது.


நேசமணியிடம் விஜய் எல்லாம் அடி வாங்கியிருக்கிறார்.எப்பொழுது கவலையாக இருந்தால் நேசமணியின் காமெடி காட்சிகளை பார்த்தால் கவலை எல்லாம் மறந்து சிரிப்போம். அந்த நேசமணியை கொடுத்து நம்மை எல்லாம் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பால் மரணம் என்பதை தான் யாராலும் நம்ப முடியவில்லை.


இந்த நிலையில் வடிவேலு அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் சித்திக் பற்றி கூறியுள்ளார்.ப்ரண்ட் படத்தில் சித்திக் ரொம்பவே ப்ரீடம் தந்தாரு, அவர் சொல்லுறதை மட்டும் பண்ண சொல்லல,எனக்கு என்ன தோணுதோ அதைத் தான் அந்த படத்தில் பண்ணினேன். அதான் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.இனி வருகின்ற இளம் இயக்குநர்களும் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.எனக்கு மட்டுமல்ல எல்லா ஆடிஸ்டையுமே அவங்க ஸ்டைலில் நடிக்க தான் அவரு ஊக்குவிச்சாரு. பிரண்ட்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு அது தான் காரணம் என்று சொல்லியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement