• Apr 28 2024

வடிவேலு இப்படி செய்தாரா.... பல அடிகொடுத்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் பிரபலம்.....

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருபவர் வைகைபுயல் வடிவேலு. இவர் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். எந்த வேடம் கொடுத்தாலும் திறமையாக நடித்துக்காட்டுபவர். இப்போது பல நடிகர்கள் அவருடன் இருந்ததால் எங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். 


அதுவும் தங்களுக்கு நிறைய டயலாக் கொடுக்க மாட்டார், சம்பளமும் அதிகம் கொடுக்க மாட்டார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. நடிகை  கோவை சரளாவுக்கு கூட வடிவேலு வாய்ப்பு கொடுக்க  மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல் வடிவேலுவினால்  பிரபல நடிகர் ஒருவருக்கு படவாய்ப்பு   தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில் வேறு வழியில் சென்று தனது திறமையை காட்டி இப்பொது நல்ல பேமஸ் ஆகி வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை தம்பி ராமையா தான்.


 ஆரம்பத்தில் நிறைய படத்தில் வடிவேலு வாய்ப்பு கொடுக்காமல் தம்பி ராமையாவை விளக்கி இருக்கிறார். அதன் பிறகு தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துவருகினார்.  காமெடியனாகவும் கலக்கி தனக்கான முத்திரையை பதித்துக் கொண்டார். மேலும் ரஜினிகாந்த் அவர்களும்  தம்பி ராமையாவை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார். ஏனென்றால் எந்த தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி பேசக்கூடிய அளவுக்கு அறிவு தம்பி ராமையாவுக்கு இருக்கிறது.


இவர் இயக்குனராக பணியாற்றி இரண்டு படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். மைனா, கும்கி போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். காமெடி மட்டுமே தனக்கு வரும் என்ற முத்திரையை உடைத்து "சாட்டை" படத்தில் வில்லனாகவும் தம்பி ராமையா மிரட்டி இருந்தார்.


இவருக்கு வடிவேலுவின் சூழ்ச்சியால் வாய்ப்புகள்  மறுக்கப்பட்ட போதும் தனக்கான திறமை மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்.  இப்போதும் இவர் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும், அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement