• Apr 27 2024

என்னை மோசமா துன்புறுத்துவாரு அதனால் தான் இப்படிப் பண்ணினேன்- உண்மையை உடைத்த ரமேஷின் இரண்டாவது மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை சென்ட்ரல் ரயில் அருகே உள்ள அல்லிகுளம் மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகனான 42 வயதுடைய டான்ஸ் ரமேஷ்.  சிறுவயதில் இருந்து  சினிமாவை பார்த்து நடனத்தை கற்று  கொண்டு மேடை  நடன நிகழ்ச்சியில் கலந்து நடனமாடி வந்துள்ளார். அப்போது இவருடன் 11வயதில் நடனமாடிய  சித்தரவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.


13 வயதில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 25 வயதுடைய ஜெனிபர் , 22 வயதுடைய சானோபர் என இரு மகள் உள்ளனர். அவ்வபோது அல்லி குளம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் நடனமாடி  சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஷு தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி மிகவும் பிரபல்யமானார். இதன் பின்னர் ஜித் நடிப்பில் துணிவு, ரஜினி காந்த் நடித்த ஜெயிலர், படத்தில் சிறு வேடத்தில் நடன காட்சிகளில் ரமேஷ் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னப்ப திடல் மோர் மார்க்கெட் பகுதியைச் இன்பவள்ளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டடு மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விஷயம் மனைவி சித்ராவிக்கு தெரிய வரவே கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுள்ளனர். சித்ராவின் உறவினர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இன்பவள்ளியை தாக்கி உள்ளனர்.


இதனையடுத்து இன்பவள்ளியிடம் தொடர்பு இல்லாமல் ரமேஷ் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து புளியந்தோப்பு கே. பி. பார்க் பகுதியில் வசித்து வரும் இன்பவள்ளியுடன்  ரமேஷ் வாழ்ந்து வந்துள்ளார்.   ரமேஷ் பிறந்தநாளை முன்னிட்டு   இன்பவள்ளியிடம் மது குடிப்பதற்கு  500பணம் கேட்டதாகவும் பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தியில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் இருந்து ரமேஷ்  கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.


இதனால் இன்பவள்ளி தான் ரமேஷை கொலை செய்திருக்க வேண்டும் என சித்ரா புகார் அளித்திருந்தார். அத்தோடு இன்பவள்ளி ரமேஷை அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோவும் வெளியானது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித் இன்பவள்ளி பேசியுள்ளார். அதாவது இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை. இது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ அந்த வீடியோவை நான் 4 வருடத்திற்கு முன்பு கார்த்தி என்பவருக்கு அனுப்பி இருந்தேன். இப்போ இதை யாரும் வெளியிட்டாங்க என்று தெரில. அவர் வழமையாவே குடிக்க காசு கொடுக்கா விட்டால் தற்கொலை செய்யப் போறேன் என்று மிரட்டிட்டே இருப்பாரு.அவர் ரொம்ப மோசமா நடந்துப்பாரு. குடி தான் அவருக்கு முக்கியம். இப்போ அவருடைய அறப்பில் எனக்கு ஏதும் தொடர்பிருந்தால் தண்டனை தாங்கோ.ஆனால் அவரை நான் அடித்த வீடியோ இப்போது எடுத்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement