• May 19 2024

விஜயாவால் அதிர்ச்சியில் முத்து... சீதாவால் ஸ்ருதிக்கு காத்திருந்த ஷாக்... 'சிறகடிக்க ஆசை' இன்றைய எபிசோட்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிறகடிக்க ஆசை'. ஏனைய சீரியலைப் போலவே இந்த சீரியலிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் விஜயா தெருவைக் கூட்டித் தண்ணீர் தெளிக்க போகின்றார். அங்கு வந்த அன்னம் "அக்கா தண்ணீர் எல்லாம் தெளிக்க கூடாது, சாணம் தான் தெளிக்கணும்" என சொல்கின்றார். அதற்கு விஜயா "அதெல்லாம் எப்படி? நான் செய்யமாட்டேன்" என்று கூறி மறுப்புத் தெரிவிக்கின்றார். பதிலுக்கு மீனா "நான் செய்யறேன் விடுங்க அத்தை" என்று சொல்ல அந்த நேரத்தில் பாட்டி வெளியே வர உடனே விஜயா நானே செய்கிறேன் என சொல்கிறார்.

அதன் பின்னர் மீனா சாணம் எடுத்து வந்து கொடுக்க விஜயா மூக்கை மூடிக்கொண்டு அதை தண்ணீரில் கலந்து தெளிக்கின்றார். அதனை மாமியார் வேடிக்கை பார்ப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே செய்கிறார். இதையெல்லாம் அவதானித்த முத்து இது நிஜமாக கனவா என தெரிந்து கொள்ள மீனாவை கிள்ள அவர் "எதுக்கு கிள்ளுறீங்க" என்று கேட்க அதற்கு முத்து "கனவானு தெரிஞ்சுக்கத்தான்" என்று சொன்னதும் மீனா திரும்பவும் முத்துவை கிள்ள எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க, அதற்கு முத்து இப்ப நான் ஷாக்கில் இருக்கேன் எதுவும் தெரியாது எனக் கூறி விடுகின்றார்.


இதனையடுத்து மறுபுறம் சீதா ரவியின் போனை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வருகின்றார். உடனே ரவி சீதாவை கூட்டிச்சென்று உட்கார வைத்து தான் செய்த புதிய டிஸ்ஸை சாப்பிட வைக்கின்றார். அப்போது சீதா ஸ்ருதி பற்றி பேசி கலாய்த்து கொண்டிருக்க அந்த சமயத்தில் அவரே ரவிக்கு போன் செய்ய சீதா அது பொண்ணா இல்லையான்னு நான் கண்டுபிடிக்கிறேன் என போனை வாங்கி பேசுகின்றார். உடனே ஸ்ருதி கடுப்பாகிறார். 

இவ்வாறாக ரவி இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக பேசுவது தெரிந்து டென்ஷன் ஆகிறார். இதே ஞாபகத்தில் டப்பிங் பேசும்போது குழப்பத்தில் செய்கின்றார். மறுபுறம் விஜயா ரூமுக்குச் சென்று அண்ணாமலையிடம் "நான் எதுக்கு இவ்வளவு வேலை செய்யணும் என் கையில சாணம் வாசனை வந்துகிட்டே இருக்கு, அருவருப்பா இருக்கு" என கூறுகின்றார். அதற்கு அவர் "பணம் வேணும்னா இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும்" என கிண்டலாக கூறுகின்றார். 


பின்பு சரி இப்ப நான் என்னதான் செய்யணும் என கேட்க நேரா அம்மாகிட்ட போய் இதே கேள்வியை கேளு, அவங்க சொல்ற வேலையெல்லாம் செய் என்று சொல்லி அவரை அனுப்புகிறார். இதனையடுத்து வெளியே வரும் விஜயா அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "குடுங்க அத்தை நான் செய்கிறேன் இன்னைக்கு என்ன சமைக்கனும்னு சொல்லுங்க" என்று கேட்கின்றார். 

அந்த சமயத்தில் மீனா வந்து "மீன் கழுவியாச்சு பாட்டி பாதி குழம்பு வச்சுட்டு பாதி வறுத்திடலாம்" என்று சொல்கிறார். அதற்கு அவர் "அத உன் அத்தை கிட்ட சொல்லு அவ தான் சமைக்கப் போறா" என்று கூறுகின்றார். பின்னர் கொஞ்ச நேரத்தில் முத்து வெளிய வந்து "இன்னைக்கு மீன் குழம்பா நீங்க வச்சா இந்த தெருவே மணக்கும் என சொல்ல பாட்டி நான் வைக்கப்போவதில்லை" என்று சொல்கிறார். 

அதற்கு உடனே மீனாவா அவளும் நல்லா தான் வைப்பா என்று சொல்ல மீனாவும் இல்லை என்று சொல்கிறார். அதற்கு "அப்படின்னா இந்த வீட்ல சமைக்க ஆளே இல்லையா" என்று சொல்ல பாட்டி உங்க அம்மா தான் சமைக்க போறா என்று சொன்னதும் அவர் அதிர்ச்சி அடைகிறார். 

அதாவது "நீங்க இங்க வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதே என்னால நம்ப முடியல, அதுக்கான ரகசிய காரணம் என்னன்னு தெரியல.. இப்படி ஒரே அடியா ஷாக் கொடுத்தா எப்படி" எனக் கூறிப் புலம்புகிறார். 

பின்னர் பாட்டி நீ சமையல் பண்ணு, நானும் உன் கையாலேயே சாப்பிடுறேன் என்று சொல்ல விஜயா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது. இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த எபிசோட்டின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement