• Apr 27 2024

ரஜினிகாந்த் - சிபி சக்ரவத்தி படம் கைவிட இதுதான் காரணமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.மேலும்  இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்திலும் நடிக்கிறார்.

இந்த இரு படங்கள் மட்டுமின்றி லைக்கா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினி. மேலும் இப்படத்தை சிபி சக்ரவத்தி இயக்குவதாக இருந்தது.


ஆனால், அதன்பின் சிபி சக்ரவத்தி கூறிய கதை ரஜினிக்கு முழு திருப்தியை தராத காரணத்தினால் சிபி சக்ரவத்தி இந்த ப்ராஜெக்டில் இருந்து வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் இது உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் சிபி சக்ரவத்திக்கு உதவியாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இருந்தார்.



விஜயேந்திர பிரசாத் விஷயங்கள் எதுவும், சிபி சக்ரவத்திக்கு செட் ஆகாத வில்லையாம்.அத்தோடு  அவர் கூறும் விஷயங்கள் சிபி சக்ரவத்திக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக சிபி சக்ரவத்தியால் இந்த படத்தை இயக்க முடியாது என்று எண்ணி சிபி சக்ரவத்தி இந்த ப்ராஜெக்டில் வேண்டாமென்று ரஜினி முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement