• May 18 2024

சூர்யா படத்தை இயக்காததற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான் – லோகேஷ் கனகராஜ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குநராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் மூலமே தனக்கென ஓரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.

அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதன் பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வசூலிலும் அள்ளிக்குவித்தது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

அத்தோடு , இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து லோகேஷ் அவர்கள் தளபதி 67 என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் அவர்கள் தளபதி 66 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்தவுடனே தளபதி 67 படம் உருவாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா படத்தை இயக்காததற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார். லோகேஷ்- சூர்யா கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்னர் உருவாக இருந்த படம் இரும்புக்கை மாயாவி.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி ஆரம்பகட்ட பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், திடீரென இந்த படம் டிராப் ஆகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது, இரும்புக்கை மாயாவி படத்திற்காக எட்டு மாதங்கள் பணி செய்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லை. மேலும் இதை ஓபன் ஆகவே தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களிடம்,. என்னால் இந்த படத்தை இப்போது இயக்க முடியுமா? என்று தெரியவில்லை சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கலாம் என்றும் சொல்லி விட்டேன். எனவே சூர்யாவின் படத்தை இயக்காததற்கு நான் மட்டுமே காரணம் என்று தெரிவித்து இருந்தார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement