• Apr 27 2024

இதுவே செம போதையாத் தான் இருக்கு- என் சொந்தக் காசில இன்னும் பண்ணுவேன்- ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த KPY பாலா!

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான kpy நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் பாலா. இவர் இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருவதோடு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இது தவிர சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் பாலா சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதன் முறையாக மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான ஆம்புலன்ஸ்களை வாங்கி தானமாக வழங்கி இருக்கின்றார்.இதனால் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த பாலா கூறியதாவது அவருக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருவதாக உறுதியளித்து விட்டு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டேன். வெளிநாடுகள், உள்ளூர் என தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டேன். 

டிரஸ்ட் மூலமாக பலரது காசை வாங்கி தான தர்மம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நானே உழைத்து சம்பாதித்து, அதில் வரும் பணத்தில் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என பாலா பேசியது பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது.


இதுவே எனக்கு செம போதையா இருக்கு, ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக ஷோக்கள் கிடைக்குது. அதன் மூலம் வரும் வருமானத்தை என் சக்திக்கு மீறி இப்படி என்னால முடிஞ்ச நல்லா காரியத்துக்கு செலவிடுவது சந்தோஷம். இந்த ஆண்டு இன்னும் 10 ஆம்புலன்ஸ் வாங்கித் தருவேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement