• May 18 2024

'பொன்னியின் செல்வன்' சேலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை... காரணம் இதுவா...? விற்பனையாளர் எடுத்த முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அதே பெயரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இப்படமானது எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.


இதனால் அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாகவே பிரபலமான படங்கள் ஏதாவது வெளியாகினால் அப்படத்தில் நடிகர், நடிகைகள் அணிந்துள்ள ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்யப்படுவது வழமை. அதுமட்டுமல்லாது இது டிரெண்டாகவும் உள்ளது.


சமீபத்தில் கூட விஜய்யின் 'பீஸ்ட்' படம் வெளியான போது அப்படத்தில் அவர் அணிந்திருக்கும் ரத்தக்கறையுடன் கூடிய சட்டையைப் போன்றே சட்டையை டிசைன் செய்து அதனை விற்பனை செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு சற்று வித்தியாசமாக பட்டுப்புடவையில் அப்படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி அழகாக வடிவமைத்திருந்தனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் அந்த புடவைகளின் புகைப்படங்கள் வைரலாகி இருந்தன.


இவ்வாறாக உருவான அந்த புடவைகள் விற்பனைக்கு தயாராகி வந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து ஆன்லைன் சேலை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், “10 நாட்கள் கடுமையாக உழைத்து இந்த சேலையை தயாரித்து தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கின்றது.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து சிலர் எங்களை தொடர்பு கொண்டனர். அவ்வாறு தொடர்பு கொண்டவர்கள், பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்கள் சேலையில் இடம்பெற்றுள்ளது. 

இதனை எங்களிடம் காப்பீடு பெற்று நீங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அறியாமையால் சேலையை இப்படி உருவாக்கி இருக்கிறீர்கள். அதனால் உடனடியாக இந்த சேலை தயாரிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் "இவர்கள் இவ்வாறு கூறியதும் நாங்கள் 5 சேலைகளுடன் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்" எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு மேலும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது அச்சிடப்பட்டு தயாராக இருக்கும் இந்த 5 சேலைகளையும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய நடிகைகளுக்கு பரிசாக வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மிகவும் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement