• May 01 2024

இந்தப் படம் தான் உங்களுக்கு பெயர் வாங்கித் தரப் போகுது - ஷுட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் செய்த காரியம்- பயந்து போன நடிகர்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான்  மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ரசிகரை்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.அந்த வகையிவ் இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கின்றன.இவர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இத் திரைப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன் முதலாக வெளியாகிய திரைப்படம் தான் பரியேறும் பெருமாள்இப்படத்தில் கதாநாயகனின் தந்தையின் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார்.


பரியேறும் பெருமாள் படத்தில் இவருடைய நடிப்பு நம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து சில அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை கூறியுள்ளார்.

இதில், முதன் முதலில் நெல்லை தங்கராஜ் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளாராம். ஆனால், 30 பேரை வைத்து இவரை கடத்திவிட்டார்களாம். அதன்பின் படத்தில் நடிக்கும் போது சில வசனங்களை மறந்த நேரத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் தன் உடன் வந்தவரின்  கன்னத்தில் அடித்ததாக கூறியுள்ளார்.


அதன்பின் நெல்லை தங்கராஜிடம் சென்ற இயக்குநர் மாரி செல்வராஜ், "இந்த காட்சியை நீங்க எத்தனை முறை தான் நடிப்பீங்க, இதுதான் உங்க கடைசி முறை, சரியா நடிச்சிருங்க. நீங்க ஊர் ஊரா போய் பேர் வாங்கி இருக்கலாம், ஆனால், இந்த ஒரு படத்தில் நடித்தால் உலகமெங்கும் பேர் வாங்கலாம்" என கூறி நெல்லை தங்கராஜை சமாதானம் செய்தாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement