• May 09 2024

'அந்த உறுப்பை பெரிதாக்கி விட்டு நடிக்க வாங்கன்னு சொன்னாங்க..' ; 'இனி யாராவது பேசினால் சுட்டு விடுவேன்' - கபாலி பட நடிகை ஆதங்கம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. Vaah! Life Ho Toh Aisi! என்ற இந்தி படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்தார். 

கபாலி படத்தில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். . மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்படம் தொடங்கிய போது எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, பாலிவுட் தான் ராதிகா ஆப்தே தன்னுடைய திரைப்படத்தை தொடங்கினார். அப்போது மூக்கின் அமைப்பு சரியாக இல்லை, மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். அதோடு மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டு நடிக்க வாருங்கள் என்றும் ராதிகா ஆப்தேவுக்கு பலரும் அறிவுரை கூறியிருந்தார்கள்.

இதனால் ராதிகாவின் உடைய உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை அதிகரித்தது. உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார் ராதிகா ஆப்தே. மேலும், ஆத்திரம் அடைந்த ராதிகா, பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பது தங்களின் உரிமையாகவே கருதுகிறார்கள். இப்போது யாராவது அப்படி பேசினால் அவர்களை சுட்டு விடுவேன் என்று கூறியிருக்கிறார். தற்போது ராதிகா ஆப்தேவின் வீடியோ சோசியல் மீடியாவில் படுவைரல் ஆகி வருகிறது

Advertisement

Advertisement

Advertisement