• Apr 28 2024

குஷ்பு வீட்டில் நேர்ந்த சோகம்: கண்ணீருடன் பதிவிட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் தன் வீட்டில் இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வந்தார். அந்த செல்லங்களுக்கு குல்ஃபி சுந்தர், ஸ்னூப்பி சுந்தர் என பெயர் வைத்தார்.

அதில் ஸ்னூப்பி இறந்துவிட்டது. இதையடுத்து ஸ்னூப்பியின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு குஷ்பு  தெரிவித்ததாவது,

12 ஆண்டுகளாக எங்களில் ஒருவராக இருந்தாய். குட்டியாக வந்து எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய். உன் புரிதல், அளவில்லா பாசம், ஸ்மைல் உள்ளிட்ட குணங்கள் எங்களை கவர்ந்தது.

உன் இழப்பால் நாங்கள் இதயம் நொறுங்கிவிட்டோம். நீ சாந்தியடைந்து விட்டாய் என நம்புகிறோம். உன்னை மிஸ் பண்ணுவோம் ஸ்னூப்பி. உன்னை போன்று வேறு யாரும் இல்லை. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்

குஷ்புவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ஓம் சாந்தி. உங்களின் இழப்புக்காக வருந்துகிறோம். செல்லங்களின் இழப்பும் நம்மை அதிகம் பாதிக்கிறது. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் குஷ்பு. எங்கள் வீட்டு செல்லமும் இறந்துவிட்டது. அதனால் உங்களின் வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது.

சாரி குஷ்பு. ஸ்னூப்பியின் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தன் மாமியார் பற்றி குஷ்பு நேற்று போட்ட ட்வீட்டை பார்த்த அனைவரும் அவரை பாராட்டினார்கள்.

குஷ்பு ட்வீட் செய்ததாவது,

#Byatarayanapura தொகுதியில் இன்று உங்களை சந்திக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததற்கு சாரி டியர் பெங்களூர். மதியம் 12.45 மணி அளவில் என் மாமியார் கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. ரத்தப் போக்கு நிற்காததால் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியது இருந்தது.

தையல் போட்ட பிறகு உங்களின் பிரார்த்தனைகளால் நலமாக இருக்கிறார். 89 வயதில் அவர் என்னை சார்ந்து இருக்கிறார். என் கணவர் ஊரில் இல்லாததால் மாமியாரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது. என்னை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன், மன்னிக்கவும் என தெரிவித்தார்.

குஷ்புவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியதாவது,

குடும்பம் தான் முக்கியம். மாமியாரை கவனித்துக் கொள்ளுங்கள். அத்தோடு இந்த காலத்தில் இப்படியொரு மருமகளா என நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது.

உங்களின் மாமியார் கொடுத்து வைத்தவர். உங்களின் மாமியாருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு நல்ல மருமகள் கிடைக்க சுந்தர் சி.யின் அம்மா கொடுத்து வைத்திருக்கிறார்.

குஷ்பு உங்களை போன்று ஒரு மருமகள் தான் அனைவருக்கும் வேண்டும். ஆனால் அப்படி கிடைப்பது இல்லை. மாமியாரை இந்த அளவுக்கு பாசமாக பார்த்துக் கொள்ளும் மருமகளை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை Rama Banam தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் குஷ்பு. நல்ல கதைகள் கிடைத்தால் கூடுதலாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து இதுவரை நடிக்கவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார் குஷ்பு.






Advertisement

Advertisement

Advertisement