• Mar 29 2024

தீவிர சிகிச்சைப் பிரிவில் சரத்பாபு... உடம்பெல்லாம் விஷம்.. இந்த நோய்க்கு இப்படி ஒரு வீரியமா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் சரத்பாபு. இவர் தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது நவீன யுகத்தில் புதுசு புதுசாக வைரஸ்களும், நோய்களும் பரவி, மனித குலத்தை தாக்கி கொண்டிருக்கின்றன. அந்தவகையில் நடிகர் சரத்பாபுவையும் 'செப்சிஸ்' என்ற ஆபத்தான தொற்று ஒன்று தாக்கி உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

இவருக்கு இப்போது 71 வயதாகிறது. இவரின் உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விடவும், அங்குள்ள மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொஞ்சம் உடல்நலம் தேறினார். 


ஆனால் துரதிஷ்டவசமாக மறுபடியும் இவரின் உடல்நலம் கெட்டுள்ளது. அதாவது 'பெப்சிஸ்' என்ற நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் உடல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், உடலில் விஷம் ஏறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நோய்த் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படைய செய்துவிடும். உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது 2 சிறுநீரகங்களையும் பாதிப்பை தருவதுடன் இதயத்திலும் பாதிப்பை தந்துவிடும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் குறைந்துவிடும். அத்தோடு அது நுரையீரலையும் பாதிக்கும்.


இப்படி கடுமையான தொற்று ஏற்பட்டு இதன் வீரியம் அதிகமானால், பல உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதித்து, கடைசியில் நோயாளி சுயநினைவையே இழக்கும் நிலைமையும் ஏற்படும். அதாவது, ஒரு உறுப்பு பாதிப்படைந்து, மற்ற உறுப்புகளையும் பாதிப்பதற்கு பெயர்தான், செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்கிறார்கள். 

உயிருக்கே ஆபத்தான இந்த செப்சிஸ் தாக்கிவிட்டால் ஏராளமான சிகிச்சை முறைகள் கவனமாக செய்ய வேண்டுமாம். இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்பாபு சீக்கிரம் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement