• Apr 27 2024

“பாத்தவங்க மனச கலைச்சாகோனும்” அதுக்காக பண்ணின வேர்க் தான் “அடி பெண்ணே”Song ; மனம் திறந்தார் ‘நாம்’ தொடர் சூரியவேலன்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உலகத்தில் அனைத்து இடங்களிலும் தமிழ் வாழ்கிறது என்பதற்கு அடையாளமாக இருப்பது தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் நம்முடைய தமிழை மேம்படுத்த பாடல்களால் உலகறியச்செய்து வருகிறார்கள். அந்தவரிசையில் இண்டிபெண்டண்ட் கலைஞராக இருந்து தற்போது ரியல் ஜோடிகளாக கலக்கி கொண்டு வருபவர்கள் சிங்கபூர் வாழ் தமிழரான டி சூரியவேலன் - ரூபினி.

சிங்கப்பூர் கலைஞர்களான த. சூரியவேலன், ரூபிணி அன்பழகன், ஸ்டீபன் செக்கரியா, மற்றும் சில நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டில் 32 அத்தியாயங்களாக வெளியாகி தொடர் ‘நாம்’.மாபெரும் வெற்றி பெற்றது.இந்த தொடர் ஹிட் ஆவதற்கு அடி பெண்ணே சாங் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த பாடல் குறித்து சேனல் ஒன்றிற்கு சூரியவேலன்,பேட்டி அளித்துள்ளார்.இந்த பாடல் எழுதும் போது தொடரில் காதலனாக நடிக்கிறீங்கள் என்ற பீலிங்கில் எழுதினீங்களா? இல்லன்னா ஏற்கனவே காலேஜ் டைம்ல எழுதினீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு  ''இதில் 3 எபிசொட் தான் வர போகுது அப்பிடியென்கின்ற போது காதல்ன்னா என்னன்னு தெரியாத பையன் காதலிச்சு ஆகணும்,புரிஞ்சாககனும் ,23 எபிசோட் பாத்தவங்களிண்ட மனச கலைச்சாகோனும்,அதனால அந்த சீரியல்ல  அப்படி ஒரு  ஒர்க் இருக்கும் போது அத என்னன்னு புரிஞ்சிக்கிட்டு செய்த ஒர்க் தான் இந்த பாடல் எண்டு நான் நினைக்கிறன் . அந்த விஷயத்தை அந்த சீரியல்ல ஹரக்டா செய்ஞ்சு குடுத்திருப்பம்''என கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement