• May 19 2024

வசுவின் தம்பி ஆதியை அடித்த அர்ஜுனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- கோதை முன்னாடி சரஸ்வதி கொடுத்த பதிலடி Thamizhum Saraswathiyum Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வசுவின் தம்பி ஆதி தனது ஆபிஸில் இருந்து அந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கும் போது, வசுகேல் பண்ணி பேசுகின்றார். இவர் அக்கா கூட பேசி முடித்தவுடன் யாரோ கதவைத் தட்டுவது போல சத்தம் கேட்குது என்று எழும்பிப் போகின்றார். அப்போது யாரோ ஒருவர் வந்து ஆதியின் தலையில் அடித்து விட அவர் மயங்கி விழுகின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் கோதையும் நடேசனும் வெளியே வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்கின்றனர். பின்னர் வசுவிடம் சென்று ஆதி வந்திருவான் தானே என்று கேட்க,வசு அவன் போன் சுவிச் ஓப் என்று வருது வந்து கொண்டு இருக்கிறான் போல, என் சொல்கின்றார். இவர்கள் ஆதியின் தம்பிக்காக காத்திருப்பதை பார்த்த அர்ஜுன் குடும்பம் சிரிக்கின்றனர்.

மேலும் ராகினியைக் கூட்டிட்டு வரும் அர்ஜுன் வீடியோ கிடைக்காது என்ற சந்தோஷத்தில் கோதையிடமும் நடேசனிடமும் நக்கலாகப் பேசுகின்றார்.அப்போது கார்த்தியும் அவங்க இன்டைக்கு பிறகு புது வீட்டுக்கு போய்டுவாங்க இருக்கிற வரைக்கும் சந்தோசமாக இருந்திட்டு போகட்டும் என்று கோதையை சமாதானப்படுத்துகின்றார்.


தொடர்ந்து வசு தனது தம்பி இன்னும் வராததால் தான் போய் பார்த்திட்டு வருகிறேன் என்று கிளம்புகின்றார். சரஸ்வதிக்கு போன் பண்ணி வரச்சொல்கின்றார். சரஸ்வதி வந்ததும் ஆதியை இன்னும் காணல வாங்க போய் பார்க்கலாம் என்று ஆதியைப் பார்க்க போகின்றனர். அங்கே ஆதி மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் ஆதி எழும்பியதும் என்னாச்சு என்று கேட்க, அவரும் வீடியோ எடுத்தவுடன் யாரோ வந்து என்னை அடிச்சுப் போட்டுட்டு இதெல்லாம் உடைச்சிட்டு போய்ட்டாங்க என்று சொல்கின்றார். இதைக் கேட்ட சரஸ்வதியும் வசுவும் அப்போ இனிமேல் அவ்வளவு தானா, அவன் பற்றிய உண்மையை இனிமேல் நிரூபிக்கவே முடியாதா என்று கவலைப்பட, ஆதி அந்த வீடியோ வை நான் சேவ் பண்ணி வைச்சிருக்கிறேன் என்று அந்த வீடியோவைக் காட்ட இருவரும் பார்த்து அதிர்ச்சியடைவதோடு வீடியோவைக் கொண்டு வீட்டுக்கு வருகின்றனர்.


வீட்டில் கோதையிடம் அர்ஜுன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கிறேன் என்று சொன்னல்ல அத்தை அது என்ன என்று சொல்லட்டுமா என்று கேட்கின்றார்.அப்போது சரஸ்வதி வந்து உன்னுடைய சர்ப்ரைஸ் யாருக்கடா வேணும் இன்டையோட உன்னுடைய ஆட்டம் முடிஞ்சுது என்று கத்துகின்றார். சரஸ்வதியைக் கண்டதும் அர்ஜுனின் அக்காவும் அம்மாவும் அவரை வீட்டை விட்டு துரத்தும் படி சத்தம் போடுகின்றனர்.


அப்போது சரஸ்வதி இது என் வீடு, இங்க இருந்து போகச் சொல்ல உங்க யாருக்கும் உரிமை இல்லை என்று உள்ளே வருகின்றார். அப்போது ஆதி தன் தலையில் யாரோ அடித்த விஷயத்தைச் சொல்லி விட்டு வீடியோ இன்னும் அழியல வீடியோ இருக்கு என்று சொல்ல,அர்ஜுன் பயத்தில் முழிக்கின்றார். அப்போது அர்ஜுனின் அக்கா சரஸ்வதியை திட்ட கோதை அவரை முறையாகத் திட்டி வாயை மூடிட்டு இருக்கச் சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement