• May 09 2024

சல்மான் கானை தடுத்த செக்யூரிட்டி..பார்க்கெட்டில் என்ன வைத்திருந்தார் தெரியுமா-சர்ச்சையில் சிக்கிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக பல ஆண்டுகாலங்களாக நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்குள் நடிப்பில்தான் போட்டி. ஆனால் இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக தான் உள்ளார்கள். சமீபத்தில் ஷாருக்கான் தன்னுடைய மகன் விஷயத்தில் மிகுந்த மனஉளைச்சலில் சிக்கிய நிலையில், அவரது வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறியவர் சல்மான்.

மேலும் இவர் எந்தளவிற்கு அதிகமான படங்களையும் ரசிகர்களையும் கொண்டுள்ளாரோ அதோ அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். கடந்த 1998ல் ஜோத்பூரில் நடந்த சூட்டிங்கின்போது அரியவகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.



இதேபோல இந்த சம்பவத்தில் இவர் ஈடுபட்டதற்காக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் உண்டு. பிஸ்னோய் சமூகத்தினரின் புனிதமான அம்சமான அந்த அரியவகை மான்களைதான் சல்மான் வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது.

இதையொட்டி தன்னுடைய சொந்த உபயோகத்திற்கான காரை குண்டு துளைக்காத காராக மாற்றினார் சல்மான்கான். தொடர்ந்து தான் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்குமாறு சமீபத்தில் மும்பை போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தார்.மேலும் அவருக்கு தற்போது அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் முராத் கேதானி பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட சல்மான்கான்,தன்னுடைய பேக்கட்டில் பாட்டில் ஒன்றை மறைத்து வைத்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது வோட்கா இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.



மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. அந்த பாட்டிலில் இருப்பது தண்ணீரைப் போல காணப்பட்டாலும் கண்டிப்பாக வோட்கா அல்லது ரம் அதில் இருக்கலாம் என்று ஒரு சாராரும், சல்மானின் அபிமானிகள், அது கண்டிப்பாக தண்ணீராகத்தான் இருக்க வேண்டுமுன்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



அந்த வீடியோவில் அந்த பாட்டிலை முழுமையாக தன்னுடைய கைகளால் சல்மான் மறைத்துள்ளார். ஆது்துர்ட  பேக்கட்டில் அந்த பாட்டிலை வைக்கும் அவர் அதை முழுமையாக உள்ளே தள்ளுகிறார். அவருடன் அவருடைய பாதுகாவலர்கள் காணப்படுகின்றனர். மேலும் பக்கத்தில் ஒரு காவலரும் காணப்படுகிறார்.



இதனிடையே சல்மான் காரை விட்டு இறங்கியதும் அந்த பாட்டில் குறித்து காவலர் கேள்வி எழுப்புவதாகவும் அந்த வீடியோ காணப்படுகிறது. பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக இருந்துவரும் சல்மான் கான், பப்ளிக்காக இப்படி ஒரு பாட்டிலை எடுத்துவந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதை அவர் காரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement