சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை பிரியங்கா நல்காரி இவர் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக பணியாற்றுகினார். ரோஜா தொடர் முடிவுக்கு வர ஜீ தமிழில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட சீதா ராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.
சீதா ராமன் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரியங்காவிற்கு அவரது காதலனுடன் திருமணமும் நடந்தது, பின் சில நாட்களிலேயே இந்த தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இப்போது மீண்டும் ஜீ தமிழிலேயே தமயந்தி என்ற தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகிவிட்டார்.
புதிய தொடரில் கமிட்டாகியுள்ள பிரியங்கா இப்போது புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார். அதற்காக அவர் தனது கணவருடன் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Listen News!