• Apr 27 2024

நீங்கள் தரும் மரியாதை தான் சிறந்தது- ரஜினிக்கு ஸ்பெஷலான வாழ்த்துத் தெரிவித்த நடிகர் கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் கடந்த மாத இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது.

படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் ஒரு புறம் நெக்கடிவ் விமர்சனங்களையும் குவித்து வருகின்றது. அத்தோடு சோழ மன்னர்கள் இந்து இல்லை என வெற்றிமாறன் வைத்த கருத்தை மையப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர்  ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்த பிறகு நடிகர் கார்த்தியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகர் கார்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் வேலையைப் பாராட்டுவதற்கு அவர்களை சென்றடைய நீங்கள் தரும் மரியாதை மற்றும் நீங்கள் எங்களுக்குத் தரும் மகிழ்ச்சி எப்போதும் அன்பானதாக இருக்கிறது. நன்றி சார். நிறைய அன்பும் மரியாதையும் கார்த்தி" என கூறியுள்ளார்.


மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். அதில், "கமல் சார் நீங்கள் சினிமாவில் பெரிய இலக்குகளைத் தேடுவதற்கும் உயர்ந்த தரத்தை அமைக்கவும் எங்களை எப்போதும் தூண்டிவிட்டீர்கள் ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள். நிறைய அன்பும் மரியாதையும். கார்த்தி" என கூறியுள்ளார்.


மேலும் இவரைத் தவிர ரஜினி நடிகர் ஜெயம் ரவிக்கும் போன் செய்து தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement