பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சோனம் கபூர். தன்னுடைய கவர்ச்சியாலும், அழகாலும் பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட இவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவ என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு வாயு என பெயரிட்டுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சோனம் அடிஇக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதுமட்டுமல்லாது குழந்தை பிறந்த இரண்டு மாதங்கள் முடிவடைந்ததும் அவர் தனது பணிக்கு மீண்டும் திரும்பி விட்டார். அந்தவகையில் சோனம் கபூர் தற்போது 'பிளைண்ட்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இதனை ஷோம் மகிஜா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சோனம் கபூர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் மேக்கப் குழுவுடன் காட்சி அளிக்கின்றார் சோனம் கபூர். மேலும் அதில் சூட்டிங்கிற்காக தயாராகி வரும் சோனம் தனது குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து "எனது அணியுடன் நிஜ உலகில் திரும்பி வருவது, உடை அணிவது மற்றும் மக்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சொந்த மைதானத்தில் மீண்டும் இருப்பதை விரும்புகிறேன். லவ் யூ மும்பை" என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோ ஆனது தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருக்கின்றது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் "குழந்தைக்கு தாய் பால் ஊட்டும் அதனை வீடியோ எடுத்து பப்ளிக் பண்ணுவீங்களா" எனக் கேட்டுத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Listen News!