• Apr 28 2024

சீரியலில் வெடிக்கும் சண்டை... குத்தாட்டம் போடும் ராதிகா,பாக்யா..இது என்ன புதுக்கதை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கணவன், பிள்ளைகள் என குடும்பமே உலகம் என்று வாழ்ந்து வரும் இல்லத்தரசி கதாபாத்திரத்தில் அதாவது பாக்யலட்சுமியாக, அழகாக நடித்து வருகிறார் சுசித்ரா. ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு நேரத்திற்கு வாய்க்கு ருசியாக சமைத்து குடும்பத்தை கட்டுக்கோப்பாக சீரியலில் நடித்து வருகிறார் பாக்யா.

அப்பா, அம்மாவின் வற்புறுத்ததால் திருமணம் செய்து கொண்ட கோபி, பாக்யாவிடம் பிடிக்காமல் ஏனோதானோ என வாழ்த்து வருகிறான். மேலும் இந்த நேரத்தில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை எதேர்ச்சையாக சந்திக்கிறான். அவளுடன் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ராதிகா திருமணம் செய்து கொள்ளும்படி கூற திக்குமுக்காடிப்போகும் கோபி. பாக்யாவுக்கு தெரியாமல் அவளை ஏமாற்றி விவாகரத்த்து பெற கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறான்.

இதையடுத்து, கோபி - ராதிகா உறவு பாக்யாவுக்கு தெரிய வருகிறது இதனால், குடும்பத்திற்குள் சண்டை கிழம்புகிறது. இந்த நேரத்தில், தனக்கு தன்மானம் தான் முக்கியம் என முடிவு செய்யும் பாக்யா. தனது, கணவன் ஏமாற்றி கேட்ட விவாகரத்தை தானாக முன்வந்து  உடனே கொடுத்துவிடுகிறாள். விவாகரத்து ஆன பின்னும் கோபி வீட்டிற்கு வரும் பாக்யா அவரிடம் வாக்குவாதம் செய்கிறார்.

எனினும் இதையடுத்து,கோபியின் அப்பா கோபியை வீட்டை விட்டுவெளியே அனுப்பி விடுகிறார். இப்போது ராதிகாவும் கோபியை சேர்த்துக்கொள்ளவில்லை, அப்பாவும் வீட்டைவிட்டு துரத்திவிட்டதால், ஹோட்டலில் தங்கி வருகிறார் கோபி.அத்தோடு  யார் சொல்லியும் கேட்காமல் பாக்யா விவாகரத்து கொடுத்து விட்டதால், ஈஸ்வரி,இனியா,செழியன், ஜெனி என அனைவரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

கோபி மாதிரி ஈகோயிஸ்ட் கணவர்களால் அல்லல்பட்ட அம்மாவின் குமுறலை புரிந்து கொண்ட எழில் தனது தாய் பாக்யாவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். அடுத்து என்னவாகும், ராதிகா கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா? பாக்யா குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வார் என சீரியல் ரொம்ப சுவாரசியமாக  நகர்ந்து செல்கின்றது




இந்நிலையில், ராதிகாவும் பாக்யாவும் இந்தி பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் இருவரும் சும்மா இறங்கி குத்தி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிககர்கள் கதிஜா மற்றும் கண்மணி என்றும், சிரியலில் குடுமிபிடி சண்டை அதற்கு பின்னால் ஆட்டமா என்றும் கேட்டு வருகின்றனர்.இன்னும் சிலர் இது கோபிக்கு தெரியுமா? பல விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.





Advertisement

Advertisement

Advertisement