• May 01 2024

அந்த அவமானம் நிஜத்திலும் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கு... உண்மையை உடைத்த 'எதிர்நீச்சல்' சீரியல் குணசேகரன்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

மாரி செய்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் வடிவேலு, பகத் பாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். 

இந்நிலையில் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தின் போது நடந்த சுவாரசிய சமபவம் ஒன்றை அதேபடத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகர் மாரிமுத்து 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் அந்த பேட்டியில், பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனான கதிரை அழைத்து அடித்து அவமானப்படும் ஒரு காட்சிக்கு எப்படி மனரீதியாக தயாராகியிருந்தீர்கள் என்ற கேள்விக்கு மாரிமுத்து பதிலளிக்கையில் "அந்த காட்சியை எடுக்கும் போது மட்டும் இயக்குநர் ஒரு மிருகம் போல இருந்தார். தூத்துக்குடிக்கு திருநெல்வேலிக்கு இடையில் கருங்குளம் என்று ஊரில் திருநெல்வேலிக்கு அருகில் அந்த காட்சியானது எடுக்கப்பட்டது. 

அத்தோடு இக்கட்சியானது விடிய விடிய எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் கதிர் தன்னுடைய காதலி வீட்டில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள பக்கத்துவீட்டாரிடம் சட்டையை வாங்கி போட்டுகொண்டு ஒரு பரிசுப் பொதியுடன் வருவார். ஆனால் காதலி வீட்டில் இருப்பவர்கள் இவரை அடித்து அவமானப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழுத்து அசிங்கப்படுத்துவது தான் அந்த காட்சி என்று எங்களிடம் இயக்குநர் முதலிலேயே கூறிவிட்டார்.


அதுமட்டுமல்லாது அந்த காட்சி எடுக்கும் போது அனைவரையுமே மாரி செல்வராஜ் திட்டி கொண்டு ரொம்பவும் கோவமாகவே இருந்தார். நானும் அவரிடம் சென்று என்ன ஆச்சு? ஒரே கோவமாகவே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கூறிய பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதாவது மாரி செல்வராஜ் பதிலளிக்கையில் " இல்லை சார் இந்த காட்சி என்னுடைய உண்மையான வாழ்கையிலேயே நடந்திருக்கிறது" என்று கூறினார். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் இவரும் இப்படத்தில் வருவது போல காதலி வீட்டிற்கு சென்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்று. 

இதனைத் தொடர்ந்து தான் நானும் இந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று உணர்ந்து நடித்திருந்தேன்" எனவும் கூறியிருந்தார் நடிகர் மாரிமுத்து.

Advertisement

Advertisement

Advertisement