• Apr 27 2024

ஆழ்ந்த மூச்சு விடு பாப்பா விரைவில் சரியாகிவிடும் -. நடிகை சமந்தாவின் எமோஷனல் பதிவு!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. சமந்தா இந்த படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார்.இதனை அடுத்து தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்த “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகும் இப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்கியிருக்கிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இது தவிர சமந்தா தெலுங்கில்  'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் .இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 


அதில் "ஆழ்ந்த மூச்சு விடு பாப்பா. விரைவில் சரியாகிவிடும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த 7-8 மாதங்களில் நீ மிகவும் மோசமான நாட்களைப் பார்த்துவிட்டாய், அவற்றை எல்லாம் கடந்துவிட்டாய். அதை மறக்கவே கூடாது. நீ அவற்றை எவ்வாறு கடந்து வந்தாய் என்பதை நினைவில் வைத்துக் கொள்.யோசிப்பதை நிறுத்தி, கவனத்தை சிதறடித்து, ஒரு அடியை மற்றொன்றுக்கு முன்னால் வைத்து நடந்தாய்... வேலை முடிந்தது. நீ அதை எப்படி செய்தாய் என்பது நம்பமுடியாதது. நீ அதை எப்படி தொடர்ந்து செய்தாய் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உன்னைப் பற்றி நீ பெருமைப்பட வேண்டும். நீ வலிமையானவள்." என சமந்தா பதிவிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement