பிரபல பாலிவூட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் உள்ளதாக ஐபில் முன்னாள் நிறுவனர் லலித் மோடி இருவரும் மாலைதீவில் மிக நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு டுவீட் செய்திருந்தார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டதோடு சுஷ்மிதா சென் பணத்திற்காக தான் லலித் மோடியின் பின்னால் சுற்றுவதாக எல்லை மீறி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் கடுப்பான சுஷ்மிதா சென், "நான் நானாகவே இருக்கிறேன்… எனது மனசாட்சி நடுநிலையானது. சில நேரங்களில் தங்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்ளும் மனிதர்கள் மலிவான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்" என தெரிவித்திருந்தார்.
ஆனாலும், தொடர்ந்து சுஷ்மிதா சென் மீது தரக்குறைவான விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்க, அவரது முன்னாள் காதலன் விக்ரம் பாட் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.அதாவது 1990களில் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த விக்ரம் பாட் - சுஷ்மிதா சென் ஜோடி,காலப்போக்கில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இருந்தாலும் இதெல்லாத்தையும் மனசுல வச்சுக்காத மனுசன் விக்ரம் பாட், "சுஷ்மிதா சென் ஒருபோதும் பணத்துக்காக காதலிப்பவர் இல்லை, அவர் எப்பவுமே கடைசியா தான் பேங்க் பேலன்ஸ் பத்தி யோசிப்பாங்க" என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதுமட்டும் இல்லாம "ஒருநேரத்துல என்கிட்ட பணமே இல்லாதப்போ, சுஷ்மிதா சென் தான் தன்ன அமெரிக்காவிற்கு அழைச்சிட்டுப் போனதாவும், அத ஒருபோதும் தான் மறக்கவே மாட்டேன்" அப்படின்னும் விக்ரம் பாட் ரொம்பவே நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
பணத்துக்காக அழைபவர்" என்கிற சுஷ்மிதா சென் மீதான கடுமையான விமர்சனங்கள், விக்ரம் பாட்டின் இந்த கருத்துகள் மூலம் சுக்குநூறா உடைஞ்சிடுச்சுன்னு சொல்லலாம். சரியான நேரத்துல தன்னோட முன்னாள் காதலிக்கு சார்பாக விக்ரம் பாட் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!