• May 19 2024

தயாரிப்பு நிறுவத்திலிருந்து ஜோதிகாவின் பெயரை திடீரென நீக்கிய சூர்யா?- இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டு விட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,இவர் நடிகையும் தனது மனைவியுமான ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த வகையில் தற்பொழுது தனது தம்பியான கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 12-ந் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றது.சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் பாட வைத்து அப்பாடலை வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது அடுத்த சர்ச்சையாக, இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, தனது தயாரிப்பில் இதற்கு முன் வெளியான கார்கி, ஜெய் பீம் போன்ற படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் என குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் தொடங்கியபோது வெளியிடப்பட்ட போஸ்டர்களில் கூட அவ்வாறு தான் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியிடப்படும் எந்த போஸ்டரிலும் ஜோதிகாவின் பெயரே இடம்பெற வில்லை.சூர்யா தயாரிக்கும் விருமன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலரோ சூர்யா - ஜோதிகா இடையே சண்டை ஏற்பட்டுவிட்டதால் தான் இப்படி நடந்திருக்கலாம் என பல தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியாமல் ரசிகர்களும் குழம்பிப்போய் உள்ளனர். விரைவில் சூர்யா - ஜோதிகா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement