• May 18 2024

திடீரென வலிப்பு வந்து துடிக்கும் சுந்தரி- சத்தியம் வாங்கிய அனு- கடும் அதிர்ச்சியில் இருக்கும் கார்த்திக்- எதிர்பாராத திருப்பங்களுடன் சுந்தரி சீரியல்

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் தற்பொழுது முருகனுக்கு உண்மை தெரிந்ததால் அவர் கார்த்திக்கை குத்தியே ஆவேன் என்று கத்தியை எடுத்துக் கொண்டு போகின்றார். அந்தக் கத்தித் குத்து சுந்தரி மீது விழுந்ததால் சுந்தரி ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனால் முருகன் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றார். தன்னால் தான் சுந்தரி வாழ்க்கையே போயிடுச்சு என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு சுந்தரி குணமடைய வேண்டும் என்றும் எல்லோரும் கவலையில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அனு கார்த்திக்கிடம் உன் லைப்ல என்னைத் தவிர யாரும் இல்லை என்ற சத்தியம் பண்ணு என்று சொல்கின்றார். இதனால் கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கின்றார்.

மறுபுறம் சுந்தரிக்கு வலிப்பு வந்ததால் சேர்ஸ் ஓடிப் போய் வெளியில் நின்ற கார்த்திக்கை அழைத்து உள்ளே ஒரு பேசன்டிற்கு வலிப்பு வந்து விட்து கொஞ்சம் கெல்ப் பண்ண முடியுமா என்று கேட்க கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement