• Apr 27 2024

வாய்தா பட நடிகையின் தற்கொலை வழக்கில் அதிரடியாக வெளியாகிய திடீர் திருப்பம்- வலை வீசி வரும் போலிஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக், youtube மூலம் பிரபலமானவர் தான் நடிகை  பவுலின் ஜெசிக்கா. இவருக்கு படவாய்ப்புக்கள் கிடைத்து வந்ததால் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

தொடர்ந்து ராட்சசன், தெறி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோலில் நடித்து வந்த இவர் நாசர் நடிப்பில் வெளியான வாய்தா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


படம் வெளியான நிலையில் ஜெசிக்கா அவரது அப்பார்ட்மெண்டில் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் எடுக்காததை அடுத்து அவரது நண்பர் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பிரபாகரன் பவுலின் ஜெசிக்காவின் வீட்டிற்கு வந்தபோது அவர் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  நடிகையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


 அத்தோடு இவரின் தற்கொலை கடிதமும் வெளியாகி இருந்தது.அந்த கடிதத்தில் "தான் ஒருவரை மனதார விரும்பியதாகவும் அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் இந்த உலகை விட்டு பிரிவதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் பவுலின் ஜெசிக்கா எழுதியிருந்தார். விசாரணையில் பவுலிங் ஜெசிக்காவின் கைபேசி காணாமல் போனது தெரியும் வந்தது. அந்த கைபேசி எண்ணையை ஆராய்ந்த போது அவர் இறுதியாக சிராஜுதீன் என்பவருடன் நெடுநேரம் பேசியிருந்தது தெரியவந்துள்ளது.


இதனால் விசாரணைக்காக  சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.  எனவே இந்த தற்கொலையில்  திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement