• May 07 2024

ஐஸ்வர்யா ராயிற்கும் அவரது மாமியாருக்கும் இடையில் இப்படியொரு மோதலா?- இடையில் நின்று தள்ளாடும் அபிஷேக்

stella / 4 months ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இதனைத் தொடர்ந்து பாலிவூட்டில் படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தால் அங்கே நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இவர் இறுதியாக மணிரத்னம் இயக்ககத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நந்தினி என்னும் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.அத்தோடு அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.


இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஐஸ்வர்யா ராய் அவருடைய புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய தன்னுடைய வீட்டில் வசித்து வருகிறாராம்.

மேலும் நான் முக்கியமா அல்லது உங்க அம்மா முக்கியமா என்ற அளவிற்கு தனது கணவர் அபிஷேக் பச்சனிடம் பேசியுள்ளாராம் ஐஸ்வர்யா ராய்.இதில் அவர் ஐஸ்வர்யா ராய்யுடன் தனியாக வந்து வாழ்ந்துவிட்டால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுக்கு கிடைக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.


மாமியார் மருமகளுக்கு இடையே நடந்த இந்த பிரச்சனை தான் விவாகரத்து என அனைவரிடமும் வைரலாக ஆரம்பித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement