• Apr 30 2024

பிரசன்னாவிற்கு முன்னர் வேறொருவரைத் திருமணம் செய்த சினேகா...? வெளியாகிய அதிர்ச்சித் தகவல்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சினேகா 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.


இவர் 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


இவ்வாறாக இவர்கள் இருவரும் சந்தோசமாக தமது குடும்பத்துடன் இருந்து வரும் நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே பல வதந்திகள் வெளியாகி இருந்தன. 

இதனையடுத்து தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பிரசன்னாவைத் திருமணம் செய்வதற்கு முன்னதாக சினேகாவிற்கு பிரபல தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாம். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறாமல் சென்றது என்றும், அதன் பின்னர் தான் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்டதாகவும் நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement

Advertisement