• May 09 2024

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன் …அட இவரா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் 20-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. அத்தோடு இந்தப் படத்தை நாராயண்தாஸ் நரங் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தை அடுத்து மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். முதலில் இந்தப் படத்தை சரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்தப் படத்தையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸுக்கே சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு எஸ்கே 20 படத்தின் பணிகளில் அந்தத் தயாரிப்பு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அடுத்த படத்தையும் அவர்களுக்கே கொடுத்துள்ளாராம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement