• Jul 27 2024

அடுத்த வாய்ப்பு விஜய் பட இயக்குனருக்குத்தான்.. முடிவு செய்த சிவகார்த்திகேயன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வருகிறார். இதனை அடுத்து அவர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கதைகளை தேர்வு செய்வதிலும் இயக்குனர்களை தேர்வு செய்து மிகவும் கவனமாக உள்ளார். அவரது ’பிரின்ஸ்’ படம் தோல்வி அடைந்த பின்னர் அவர் பிரபல இயக்குனர்களை மட்டுமே தற்போது தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் கூறிய கதை தனக்கேற்ற மாஸ் படமாக அமையும் என்பதை முடிவு செய்த சிவகார்த்திகேயன், அந்த படத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் ஒரு அதிரடி மாஸ் ஆக்சன் படம் வேண்டும் இந்த படம் தன்னை வேற லெவலில் கொண்டு சேர்க்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.



தற்போது நடைபெறும் ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் ஏஆர் முருகதாஸ் படத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்கும் சிவகார்த்திகேயன், அடுத்த ஆண்டு வெங்கட் பிரபு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணையும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

அதேபோல் ’கோட்’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் படத்தின் பணிகளை வெங்கட் பிரபு  தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement