• Apr 28 2024

பலருடன் உறவில் இருந்த சிம்ரன்.. பல வருடத்தின் பின்னர் வெளியான நீண்டநாள் ரகசியம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் குறிப்பாக தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார். 


இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்த சிம்ரன் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தன்னுடைய நடனத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் 2 டிசம்பர் 2003 இல் தனது குழந்தை பருவ நண்பரான தீபக் பாக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அதீப் ஓடோ மற்றும் ஆதித் வீர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


சினிமா நடிகைகள் என்றாலே பலருடைய காதல் வலையில் சிக்குவது வழமையான ஒன்று. அவ்வாறான பல காதல் ஜோடிகள் இருக்கிறார்கள். சிம்ரனும் இதற்கு விதி விலக்கானவர் அல்ல. அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிம்ரன் பிரபலமாக இருந்த போதே நடன இயக்குநர் ராஜசுந்தரம் என்பவர் சிம்ரனை காதலித்து வந்தாராம், முக்கியமாக இவர்கள் இருவரும் சேர்ந்து 'ஐ லவ் யூ' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்களது காதல் பிரிந்து விட்டது. அதாவது ராஜசுந்தரத்தின் தந்தை சிம்ரன் திருமணத்திற்கு பின் நடிக்க கூடாது என்று கூரியது தான் இருவரும் பிரிய முக்கிய காரணமே.


இதன் பின்னர் நடிகர் கமல் கூட உறவில் இல்லாத நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் சிம்ரன் மற்றும் கமல் இருவரும் இணைந்து 'பம்மல் கே சம்மந்தம்' மற்றும் 'பஞ்சதந்திரம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்கள்.


இதன் பின்னர் தான் இவர்கள் இருவருக்கும் காதல் உறவு ஏற்பட்டுள்ளது,இதன் பின்னர் சிம்ரனும் கமலும் திருமணம் செய்வதாக கூட ஒரு சில செய்திகள் வெளி வந்தது. இருப்பினும் இந்தக் காதலும் முறிவடைந்து இதன் பின்னர் தான் இருவருமே எந்த படத்திலும் சேர்ந்து நடிக்காமல் பிரிந்துள்ளார்கள். இவ்வாறாக சினிமாவில் சிம்ரன் ஒரு சிலருடன் காதல் உறவில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement