தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இயக்குநராக வலம் வருபவர் தான் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்பொழுது இரவின் நிழல் என்னும் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னாள் இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
எனினும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திபன் “சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்:
- நடிகர் அக்சய் குமாருக்கு ஏற்பட்ட தொற்று நோய்- விடுக்கப்பட்ட வேண்டுகோள்..!
- பிரபல நடிகரின் முன்னிலையில் விஜய் டிவியை கலாய்த்த சிவாங்கி!
- கேன்ஸ் திரைப்பட விழாவில் “இரவின் நிழல்” – பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்வீட்!
- கமலின் விக்ரம் படத்திற்காக தொகுப்பாளினி DD செய்யவுள்ள விஷயம்-குவியும் வாழ்த்துக்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!