• May 01 2024

கம்பி கட்டுற கதையெல்லாம் எப்பிடி சொல்லுறாங்க என்று பாருங்க- ஈரமான ரோஜாவே சீரியலை பங்கமாக கலாய்த்த நபர்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இதில் ஒரு வழியாக பார்த்திபனும் காவியாவும் ஒன்றினைந்து விட்டதோடு இருவரும் திருமண பந்தத்திலும் இணைந்து கொண்டனர்.

அடுத்து ஜீவாவும் தன்னுடைய காதலை ப்ரியாவிடம் சொல்லி விட்டார். இரண்டு ஜோடிகளும் இணைந்து விட்டதால் ரசிகர்களும் செம குஷியில் இருக்கின்றனர்.இருப்பினும் ரம்யாவுக்கும் அவரது அம்மாவுக்கும் காவியாவும் ஜுவாவும் தான் விரும்பினார்கள் எனத் தெரிந்து விட்டது.


இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது உண்மை தெரிந்தால் ப்ரியா என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் திரும்ப குடும்பம் பிரிந்து விடுமா என்ற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 


இந்த நிலையில் இந்த சீரியலில் பெஸ்ட் நைட் சீரியலை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீன் எல்லாம் சீரியலில் தான் நடக்கும்.நேரில் நடக்காது எப்பிடி எல்லாம் காட்டுறாங்க என்று பாருங்க. முதல் நாள் ஒரு ஜோடிக்கும் அடுத்த நாள் அடுத்த ஜோடிக்கும் என்று நடக்குது எப்பிடியெல்லாம் சொல்லுறாங்க பாருங்க என கிண்டலடித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement