• May 19 2024

தமிழைப் புதிய பிரச்சினையில் சிக்க வைத்த அர்ஜுன்- கார்த்திக் எடுத்த முடிவு- அதிர்ச்சியில் சரஸ்வதி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் கம்பெனி ஒன்றின் பிரச்சிரனயைத் தீர்த்து வைத்ததால் அந்த கம்பெனி தமிழுக்கு சார்பாக இருப்பதாக கோதை கம்பெனிக்கு தெரிந்து விட்டது. இதனால் அர்ஜீன் கார்த்திக்கிடம் நேர்மையான வழியில் என்ன செய்தாலும் அது சரி வராது அதுக்கு தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கிறேன். நீங்க ஓகே சொன்னால் செய்யலாம் என்று சொல்கிறார்.


அப்போது கார்த்தி என்ன வேணும் என்றாலும் பண்ணு ஆனால் நீ பண்ணுற எந்த விஷயத்தாலும் நமக்கு பாதிப்பு வந்திடக்கூடாது என்று சொல்ல அர்ஜுன் அதெல்லாம் ஒன்று நடக்காது என்று சொல்கின்றார். பின்னர் அர்ஜுன்  மிமிக்கிரி பண்ணும் ஒருவரை அழைத்து தமிழைப் போல பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றார்.

தமிழைப் போல பேசும் அந்த நபரும் ஒரு கம்பனிக் போன் பண்ணி நீங்க என்னை ஜெயிக்க வச்சால் உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையுமே நானே பண்ணித் தருவேன் என்று சொல்ல அந்த கம்பனி முதலாளி அதிர்ச்சியடைகின்றார். பின்னர் தமிழ் நேராக சென்று தனக்கு வாக்கு கேட்க அவர் தமிழ் போன் பண்ணி சொன்ன விஷயத்தை சொல்ல தமிழ் நான் பேசலையே என சொல்கின்றார்.


இதனால் தமிழ் இது அந்த அர்ஜுனுடைய வேலையாத் தான் இருக்கும்  என்பதை புரிந்து கொண்டு அசோஷியேசனுக்கு அறிவிப்பதற்காகச் செல்கின்றார். மறுபுறம் அர்ஜுன் அந்த மிமிக்கரி ஆட்டிஸ்டை வைத்து இன்னும் சில கம்பெனி முதலாளிகளுக்கு போன் பண்ணுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement