• May 18 2024

கரிகாலனுடன் நெருக்கமாக ஆதிரை... குத்தலாகப் பேசிய ஜனனி... பதிலுக்கு கிண்டலடித்த ரேணுகா... கோபத்தில் குணசேகரன்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் ஜனனி, ஆதிரை, ரேணுகா, விசாலாட்சி ஆகியோர் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது ஆதிரை கரிகாலனுக்கு பக்கத்தில் இருந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். 


அந்த சமயத்தில் குணசேகரன் கதிர், ஞானம் ஆகியோரைக் கூப்பிடுகின்றார். அப்போது ஜனனி "நல்லா சாப்பிடு ஆதிரை, அப்போ தான் நாளைக்கு போட்டோவிற்கு நல்லா போஸ் கொடுக்க முடியும்" என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். அத்தோடு ரேணுகாவும் "சாப்பிட்டு நல்லா உறங்கி போடு" என கிண்டலாக கூறுகின்றார்.

மேலும் ஜனனி "இனிமேல் உனக்கு உன் மாமியார் ஜான்சிராணி கையால தான் சாப்பாடு" எனவும் கூறுகின்றார். அதற்கு ஆதிரை சந்தோசப்படுவது போன்று தலை ஆட்டுகின்றார். அதுமட்டுமல்லாது ஆதிரைக்கு வேர்வை வழியும் கரிகாலன் அதை துடைத்து விடுகின்றார்.


இதனை அவதானித்த படி இருந்த குணசேகரன் கதிரிடம் "பார்த்தீங்களா டா, அவங்க பேசுறது எதையுமே நம்பாதீங்க, எல்லாம் பொய், பிராடு, ஏதாவது தப்பு நடக்கட்டும் அப்புறம் வச்சுக்கிறேன், என்ன நடந்தாலும் ஆதிரை கல்யாணம் கரிகாலனுடன் தான், அது உறுதி" என்று கூறி கோபத்தில் கத்துகின்றார்.

இறுதியில் ஆதிரை கல்யாணம் யாருடன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement