சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகை, நடிகர்கள் எனப் பலரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது வழமை. ஆனால் இவர்களின் ரசிகர்களோ போட்டி, பொறாமை நிறைந்தவர்களாக மாறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அஜித் - விஜய் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரினதும் ரசிகர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.
அதாவது அவர்களுடைய ரசிகர்கள் பலரும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளப் பக்கத்தில் தினமும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டைபோட்டு வருகிறார்கள்.
பல வருடங்களாக தொடர்ந்து உச்சத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த மோதல் வருகிற பொங்கலுடன் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில் வருகிற பொங்கலுக்கு விஜய் - அஜித் இருவரின் படமும் வெளியாகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவர் குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஊடகங்களில் அஜித் - விஜய் என்று தான் எழுதி வந்துள்ளார்கள்.
இதை பல நாட்களாக கவனித்து வந்த விஜய், ஒரு முறை சில முக்கிய ஊடகவியலாளர்களை தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து, இனி அஜித் - விஜய் என்று எழுதாதீர்கள், விஜய் - அஜித் என்று என்னுடைய பெயரை முன்னாடி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம் நம்ம தளபதி. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய்க்குள்ளும் இப்படி ஒரு குணம் இருக்கின்றதா எனக் கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
Listen News!