• May 19 2024

பொறுமை இழந்து கணவருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய ப்ரியங்கா- பிரிவிற்கு இது தான் காரணமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இவர் நிகழ்ச்சியை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி வருவார் என்பதும் முக்கியமாகும்.

பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணி புரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில காலங்களதக பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. எனவே இந்த விடயம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


அவர்  பேசியுள்ளதாவது, ஆரம்ப காலத்தில் பிரியங்கா தொகுப்பாளராக வாய்ப்பு தேடிய போது, பிரவீன் உதவியுடன் தான் விஜய் டிவி தொலைக்காட்சியின் உள்ளே வந்துள்ளார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும்... ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால், குறுகிய காலத்திலேயே தன்னுடைய கலகலப்பான பேச்சால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

முதலில் பிரவீனும் பிரியங்காவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தாலும் மறுபுறம் பிரியங்காவும் தனது துறையில் வளர்ந்து கொண்டே சென்றார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சினை எழ ஆரம்பித்தது.

சில நாட்கள் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், பிரியங்கா அவரின் அம்மா வீட்டில் தங்கியது... எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆக, பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். கணவருக்கு நம் மீதுள்ள கோபம் தனியட்டும் என்பதால் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாராம் பிரியங்கா. ஆனால் கணவர் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கு காரணம் தன்னுடைய கணவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருவதால், அவர் பெயரை பயன்படுத்த கூடாது என கூறி விட்டார்.


ஆனால் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும், பிரவீன் கலந்து கொள்ளாதது இவர்களின் பிரிவை உறுதி செய்தது. பிரியங்கா பிரவீனுடன், வாழ்வதற்கு தயாராக இருந்தாலும்... பிரவீன் தான் வாழ மறுப்பதாகவும் கூறியுள்ளார் பயில்வான். 

மேலும் தற்போது பிரியங்கா பொறுமை இழந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கும் பிரியங்காவின் கணவரிடம் இருந்து, இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லையாம். என்ன பிரச்சனை இருந்தாலும், அதனை மறந்து... மீண்டும், பிரவீன் பிரியங்காவுடன் சேர்ந்து வாழ்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement