• Apr 27 2024

திருமணத்தின் பின் முதன்முறையாக ஜோடியாக புகைப்படம் வெளியிட்ட பிரிட்டோ-சந்தியா தம்பதியினர்- குவியும் லைக்குகள்

stella / 9 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்து தொடக்கத்தில் பல இசை ஆல்பங்களில் நடித்து, பிறகு கோகுலத்தில் சீதை என்ற சீரியல் மூலமாக தமிழ் மக்களின் நெஞ்சத்தில் புகுந்தவர் தான் சந்தியா ராமச்சந்திரன். தெய்வம் தந்த பூவே சீரியல் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. 

இதனை தொடர்ந்து சந்தியா தவமாய் தவமிருந்து என்ற நாடகத்தில் நடிக்க துவங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரபல சின்னத்திரை நடிகர் பிரிட்டோ மனோ, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தவமாய் தவமிருந்து சீரியலில் இருவரும் நடித்த போது காதல் வயப்பட்டதோடு அண்மையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களின் திருமணம் பிரிட்டோ மத வழக்கப்படி தேவாலயத்தில்  இனிதே நடந்து முடிந்தது. பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்த நிலையில் திருமணம் முடிந்ததைத் தொடந்து தற்பொழுது இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement