• May 19 2024

புஷ்பா 2 படத்தில் இணையும் தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகன்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் புஷ்பா.இந்த திரைப்படம் கடந்த டிசெம்பர் 18 வெளியானது.இத்திரைப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியது. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்னணி நடிகையான சமந்தா இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஃபான் இந்திய திரைப்படமாக வெளியானது.

உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டையை கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அல்லு அர்ஜுனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா உருவாக உள்ளது. முதல் பாகத்தின்போதே அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகமாக புஷ்பாதி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

எனினும் தற்போது, ​​படத்தின் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கு அணுகியதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இதற்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல் பாகத்திற்காக முதலில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவரது படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறினார். அந்த கேரக்டர் பகத் பாசிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் மெகா ஹிட் ஆனால் அடுத்த பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் திரைக்கதையை இயக்குநர் சுகுமார் வடிவமைத்து வருகிறார்.

முதல் பாகத்தில் புஷ்பா எப்படி உருவாகி, செம்மரக் கடத்தல் தொழிலில் டான் ஆகிறான் என்பதை விவரித்தது. 2ம் பாகம் வெளிநாடுகளிலும் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி அமைகிறது என்பதை விவரிக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

அத்தோடு புஷ்பா 2 படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டி பகத் பாசில் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார். முதல் பாகம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது. இரண்டாம் பாகத்தை இன்னும் கூடுதலாக சர்வதேச மொழிகளில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement