தமிழ் சினிமாவின் சாதனை ஆக உருவாகி உள்ள ஒரு படமே 'பொன்னியின் செல்வன்'. அதுமட்டுமல்லாது மணிரத்னம் அவர்களின் பல நாள் கனவும் இப்படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.
இந்த படத்திற்காக பல வருடங்களாக பலரும் முயற்சி செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாராலும் முடியாத ஒன்றை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்து சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம்.
அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அவர்களின் காலத்தில் இருந்தே இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மணிரத்னத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். முதல் பாகம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆக மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் படமானது வெளியான நாள் முதல் வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் மொத்தமாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்பது சினிமா பிரபலங்கள் பலரதும் கணக்கு. தமிழகத்தில் நேற்றைய தினத்துடன் சேர்த்து இதுவரை படம் ரூ. 206 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது தீபாவளி வேறு வருகிறது. இதனால் கண்டிப்பாக படத்தின் வசூல் மென்மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!