• May 09 2024

ஷாக் கொடுத்த பாங் ஆபிஸர்ஸ்....தாறுமாறாய் கேள்வி கேட்ட முல்லையின் அம்மா...பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்.!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்.

அதாவது ஜீவாவும் மூர்த்தியும் பாங் ஆபீஸர்களிடம் எவ்வளவு பணம் கட்டணும் என்று கேட்கின்றனர்.உங்க தம்பி மூன்று கால் லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.அத்தோடு எங்க ஆபிஸரையும் அடித்து இருக்கிறார்.அதலால் 5லட்சம் கட்டனும் என்று சொல்கின்றார்

பணத்தை கட்டினால் தான் நாங்கள் கேஸை வாபஸ் வாங்க முடியும் என்று சொன்னதால் ஜீவாவும் மூர்த்தியும் நாங்கள் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு வெளியே வருகின்றனர். வெளியே வந்த மூர்த்தி கண்ணனை திட்டிக் கொண்டிருக்கிறார். வீட்டு வாடகை கூட கிடையாது. ஆனால் எப்படி இவ்வளவு பணம் செலவழிச்சு வச்சிருக்காங்க பாத்தியா என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதன் பிறகு இவ்வளவு பணத்துக்கு எப்படி ரெடி பண்ணுவது? இன்னைக்கு பேங்க் கூட கிடையாது பணமும் மொத்தமா எடுக்க முடியாது என்று கூறிக்கொண்டு சரி பிறகு ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் ரெடி பண்ணுவோம் என்று கிளம்பி போகின்றனர்.அத்தோடு  மூர்த்தி ஒரு நபரிடம் போன் பண்ணி பணம் வேண்டும் என்று கேட்க அவர் இரண்டு லட்சம் தருகிறேன் என்று சொல்கின்றார்.

பின்னர் மூர்த்தி ஒவ்வொருத்தருக்காக கால் பண்ணி கேட்க எல்லோரும் பணம் இல்லை என்று சொல்கின்றனர். ஜீவா முல்லை வீட்டுக்கு வர முல்லை மாமா அவங்க வந்துட்டாங்களா என்று வீட்டு வாசலில் ஓடி சென்று பார்த்துவிட்டு வருகிறார். இல்லை என்றதும் அழுது கொண்டே இருக்கின்றார்.பின்னர் ஜீவா போலீஸ் ஸ்டேஷனிலும் பேங்க் ஆபீஸர்கள் சொன்னதையும் கூறுகின்றார்.

மொத்தமாக 5 லட்சம் வேணும் என்று ஜீவா சொல்ல முல்லையின் அம்மா திட்டுகிறார். இந்த மொத்த பணத்தையும் கண்ணன் கொடுக்க வேண்டியதுதானே அவன் கடனை வாங்கி வச்சிட்டு சந்தோசமா இருக்கான். நாங்க கஷ்டப்படணுமா? என்று திட்டுகிறார். பிறகு ஜீவா மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிறார். ஜீவாவும் ஒவ்வொருத்தருக்காக போன் பண்ணி பணம் இருக்கா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜீவாவின் ஒரு நண்பன் மட்டும் 50 ஆயிரம் பணம் இருக்கு என்று சொல்ல ஜீவா சந்தோஷப்பட்டு அது போதும் கொடு என்று கேட்டுக்கொண்டு பிறகு இதே போல வேற யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டிருக்க மீனா பீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement