• May 01 2024

திருணத்திற்கு முன் காதலியுடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை கடந்த முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது கல்யாணைத்தை முடித்துள்ளனர்.

திருப்பதியில் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலக்ஷ்மிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ள இவர்கள் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடமும் வைரலாகிறது.


இந்நிலையில் திருமணத்திற்கு முன் தனது காதலியான மகாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் தற்போது  பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்தில் அவர் புதுத் தாலி அணியவில்லை.இதற்கு ரசிகர்கள் சிலரும் திருமணத்திற்கு முன்னரே கடும் ரொமாண்டிக் ஆக புகைப்படங்களை எடுத்துள்ளீர்கள் என கேட்டு வருகிறார்கள்.பலரும் அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...







Advertisement

Advertisement

Advertisement