• May 19 2024

செம்பருத்தி சீரியலின் கிளைமாக்ஸ் சீனுக்காக பார்வதி கட்டிய புடவையின் விலை இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் செீரியல்களைப் பார்த்து வரும் ரசிகர்களின் தொகையானது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் செம்பருத்தி.

இந்த சீரியல் இதுவரை 1400 எபிசோடுகளை கடந்துள்ளதோடு தற்பொழுது இது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அந்த வகையில் இந்த சீரியல் இந்தவாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த கிளைமாக்ஸ் எபிசோடில் பார்வதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பார்வதி பிரத்யேகமாக தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து ஜொலிக்க உள்ளார். இந்த புடவையின் மதிப்பு மட்டுமே 1 லட்சம் ரூபாய் என சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம்பருத்தி கிளைமாக்ஸை 16 செக்மென்ட்டுகளாக ஷு தமிழ் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பார்வதிக்கு இப்படி தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ‌

இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement