• Apr 27 2024

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் திருமணத்திற்கு செல்கின்றார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்- அடுத்து என்ன நடக்கப் போகிறது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்கள் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதோடு டி ஆர் பியிலும் இந்த சீரியல்கள் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது உறுதியாகி விட்டது. திருமணத்திற்குப் பிறகு என்ன நடக்கப் போகின்றது கோபி மனம் மாறுவாரா என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் தனது வியாபாரத்தில் முல்லையின் அக்கா விட்ட சவாலை ஜெயித்து விட்டார். ஆனால் கண்ணன் பாங்கில் லஞ்சம் வாங்கவது போல காண்பிக்கப்படுகின்றது. இதனால் அடுத்து என்ன நடக்கம் என மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த இரண்டு சீரியல்களின் மெகா சங்கமமும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. பாக்கியாவின் திருமணம் முடிந்ததை தனம் மற்றும் மூர்த்தி அறிந்தால் என்ன நடக்கும் மெகா சங்கமம் எப்படி நடக்கும் என அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement