• Apr 26 2024

கேட்டரிங் விஷயத்தில் பாக்கியாவுக்கு கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பம்- நடந்த விஷயங்களை கேட்டு மகிழ்ந்த எழில்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அந்த வகையில்  இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.அதாவது  எல்லோருக்கும் 15 நிமிடம் டைம் கொடுக்கப்படும் அதற்குள் நீங்கள் உங்கள் டேபிளில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஒரு டிஷ் செய்ய வேண்டும் என சொன்னதால் வந்திருந்தவர்களில் சிலர் இதை எங்களால் செய்ய முடியாது என கிளம்பிச் சென்றனர்.

மீதம் 10 பேர் மட்டுமே இரண்டு நிலையில் ஐந்து நபர்களாக பிரித்து இரண்டு குழுவாக போட்டி நடைபெற்றது. அதன் பிறகு ராஜசேகர் இவை அனைத்தையும் டெஸ்ட் செய்து ஈஸ்வரி மசாலா கேட்டரிங் சர்வீஸை அழைக்க பாக்கியா உள்ளே செல்கிறார். ராஜசேகரை பார்த்ததும்  நீங்க பாக்கியலட்சுமி தானே எப்படி இருக்கீங்க என  நலம் விசாரிக்கின்றார். அதன் பிறகு நீங்க செஞ்ச டிஷ் இந்த முறையும் சூப்பர் ஆனா எங்களால ரிஸ்க் எடுக்க முடியாது இது சாதாரணமாக ஆயிரம் பேருக்கு சமைக்கிற விஷயம் கிடையாது ஒரே நேரத்துல ஆறு மண்டபத்துக்கு சமைக்கணும். பெண்களால இதை செய்ய முடியுமா என்பது சவாலான விஷயம் தான் என சொல்கிறார்.


ஆனால் பாக்கியா இந்த உலகத்துல வாய்ப்புக்காக காத்திருந்து தோத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. நீங்க குடுக்குற இந்த வாய்ப்பு என்னுடைய வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் மட்டுமில்லாமல் என் கூட இருக்கிற பெண்களோட வாழ்க்கையில் இது மிகப்பெரிய திருப்புமுனையாய் இருக்கும் என கூறுகிறார். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா உங்க பேரை கெடுக்க மாட்டேன் என பாக்யா சொல்கிறார்.


 பிறகு யோசித்த ராஜசேகர் அப்படின்னா ஒன்னும் பண்ணலாம் எனக்கு ஒரு மினி பார்ட்டி  இருக்கு அங்க ஒரு 200, 300 பேர் வருவாங்க அதுக்கு முதலில் சமைச்சு காட்டுங்க. அதுக்கப்புறம் இந்த கேட்டரிங் பத்தி பார்க்கலாம் என சொல்கிறார். ஒரே ஒரு வாய்ப்பு தான் எனவும் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகிறார்.இருந்தாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு பாக்யா சந்தோஷத்துடன் கிளம்பிச் செல்கிறார். பிறகு எழிலிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவன் பாக்கியாவை பாராட்டி வாழ்த்துகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.





Advertisement

Advertisement

Advertisement