• May 18 2024

லியோ ரசிகர் காட்சிக்கு அனுமதி கிடையாது... உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் லியோ திரைப்படத்திக்கான மற்றுமொரு விசேட செய்தி கிடைத்துள்ளது.


லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதி தரவேண்டும் என்று படக்குழு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே திரையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


லியோ திரைப்பட சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி தருமாறு லியோ திரைப்பட குழுவினர் உயர் நீதிமன்றத்திற்கு  மனு ஒன்றை சமர்பித்ததை அடுத்து அதற்கான அனுமதி மறுக்கபட்டு காலை 7.00 மணிக்கு திரையிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் 19ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.    

Advertisement

Advertisement