• Oct 08 2024

“நீயா நானா” கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத்.

தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட் என்று கூற வேண்டும். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார்.

அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் கோபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அதாவது அவரின் முழு சொத்து மதிப்பு 1 முதல் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 கோடி வரை) என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அத்தோடு இதுக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் கோபிநாத்தின் சொத்து மதிப்பு பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement