• May 12 2024

மாலை போட கைவசம் ஆட்களையும் கூட்டிற்று போறாரே... ஆதாரத்துடன் சிக்கிய அசீம்.. கேலி செய்யும் நெட்டிசன்ஸ்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'பிக்பாஸ்'. இதன் ஆறாவது சீசன் ஆனது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு அசீம், விக்ரமன் சிவின் ஆகியோர் தேர்வாகினர்.


இவர்களில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். அத்தோடு டைட்டிலை வென்ற அசீமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி காரும் வழங்கப்பட்டு இருந்தது.


இருப்பினும் இந்த சீசனில் விக்ரமன் தான் வெல்வார் என்று ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றமை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அசீம் பண்ணி வரும் அலைப்பாறைகளோ ஏராளம். அதாவது மக்கள் நாயகன் அசீம் போன்ற ஹேஷ் டேக்குகளை தொடர்ந்து போட்ட வண்ணம் இருக்கிறார். 


அசீமின் இவ்வாறான பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பட்டம் வென்றதில் இருந்து பல இடங்களுக்கு கோப்பையுடன் செல்லும் அசீமுடன் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் முக்கிய விடயம் என்னவெனில் அசீம் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட அதே ஆட்கள் தான் அங்கும் இருக்கின்றனர். 


இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் "எங்கு சென்றாலும் மாலை போட நபர்களையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்று விடுகிறீர்களா" என்று கேட்டு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement