• May 10 2024

10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் நஸ்ரியா நசீம்.. புளூஸ்டார் நடிகர் தான் ஜோடியா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக இருந்த நஸ்ரியா நசீம், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா நசீம், அதன் பிறகு அட்லி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இதனை அடுத்து தனுஷ் உடன் ’நய்யாண்டி’ துல்கர் சல்மான் உடன் ’வாயை மூடி பேசவும்’ ஜெய் உடன் ’திருமணம் என்னும் நிக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை, ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார்.



இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு கழித்து தற்போது நஸ்ரியா நசீம் தமிழில் உருவாகும் ஒரு வெப் தொடரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த வெப் தொடரில் நஸ்ரியா நசீம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த தொடரில் சாந்தனு பாக்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கிரைம் கதை அம்சம் கொண்ட இந்த தொடரை சூர்யா பிரதாப் என்பவர் இயக்கி வருவதாகவும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல். விஜய் இந்த வெப் தொடரை தயாரித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த வெப்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement